» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆடு திருடிய 3பேர் கைது : ஆட்டோ பறிமுதல்!

புதன் 1, பிப்ரவரி 2023 12:06:28 PM (IST)

மெஞ்ஞானபுரம் அருகே ஆட்டோவில் வந்து ஆடு திருடிய 3பேரை போலீசார் கைது செய்தனர். திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் தைலாபுரத்தைச் சேர்ந்த அலிஷ் பிரபாகர் மனைவி ஏஞ்சலின் மேரி (33) என்பவர் வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஏஞ்சலின் மேரியின் ஆடுகள் அவரது வீட்டில் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு ஆட்டோவில் வந்த ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி பகுதியைச் சேர்ந்தவர்களான இருளப்பன் மகன் இசக்கிமுத்து (27), நாராயணன் மகன் முத்துக்குமார் (23) மற்றும் சிவா மகன் முத்தண்ணா (19) ஆகிய 3 பேரும் ஏஞ்சலின் மேரியின் ஆட்டை திருடி கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்.

இதுகுறித்து ஏஞ்சலின் மேரி அளித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜ் வழக்குபதிவு செய்து இசக்கிமுத்து, முத்துகுமார் மற்றும் முத்தண்ணா ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.10,000 மதிப்பிலான ஒரு ஆடு மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.


மக்கள் கருத்து

ஆண்டFeb 1, 2023 - 12:35:14 PM | Posted IP 162.1*****

பரம்பரை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory