» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் வாழ்த்து!

புதன் 1, பிப்ரவரி 2023 11:43:58 AM (IST)



ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கே.எஸ். தென்னரசுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். 

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏவும் ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளருமான கே.எஸ். தென்னரசை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.  இந்நிலையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கே.எஸ். தென்னரசுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான எஸ்.பி. சண்முகநாதன் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். 

அப்போது அமைப்புச் செயலாளரும் கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளருமான என். சின்னத்துரை, தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், தென் சென்னை மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் சென்னை மாநகராட்சி உறுப்பினருமான கதிர் முருகன், தூத்துக்குடி மேற்கு பகுதி கழக செயலாளர் ஏ. முருகன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெ. தனராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் வக்கீல் முனியசாமி, பி.பி. அக்ரஹாரம் வட்டக் கழக செயலாளர் அப்துல் காதர், சாம்ராஜ், கார்த்தி, சிவக்குமார், மைதீன், காதர், அமானுல்லா, ஆனந்த், சகாயராஜா உள்ளிட்டோர் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory