» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்: 50-க்கும் மேற்பட்ட திருமணம்

திங்கள் 5, டிசம்பர் 2022 7:44:56 AM (IST)

சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். விழா நாட்களிலும், வார விடுமுறை நாட்களிலும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் வார விடுமுைற மற்றும் வளர்பிறை சுபமுகூர்த்த தினமான நேற்று திருச்செந்தூர் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் வந்தனர். 

மேலும் கோவிலில் 50-க்கும் மேற்பட்ட மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது. கோவில் வளாகம், மண்டபங்களிலும் ஏராளமான மணமக்களுக்கு திருமணம் நடந்தது. புதுமண தம்பதிகள் முருக பெருமானை வழிபட்டு இல்லற வாழ்வை தொடங்கினர். இதனால் கோவில் வளாகத்தில் ஆங்காங்கே புதுமண தம்பதிகளாகவே காட்சியளித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory