» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மீனவரை கல்லால் தாக்கி கொல்ல முயற்சி: இளஞ்சிறார் உட்பட 2பேர் கைது
ஞாயிறு 4, டிசம்பர் 2022 11:22:26 AM (IST)
தூத்துக்குடியில் மீனவரை கல்லால் தாக்கி கொல்ல முயன்றதாக இளஞ்சிறார் உட்பட 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தருவைகுளம், நவமணி நகரை சேர்ந்தவர் தாசன் மகன் அமல்ராஜ் (29). மீனவரான இவருக்கும் தாளமுத்து நகர், ஜே.ஜே., நகரைச் சேர்ந்த முருகன் மகன் செண்பகராஜ் (29) என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. நேற்று டி.சவேரியார்புரத்தில் நடந்த திருவிழாவில் அமல்ராஜ் தனது அண்ணன் அந்தோணி மைக்கேல் என்பவருடன் நின்று கொண்டிருந்தாராம்.
அப்போது அங்குவந்த செண்பகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் அமல்ராஜை சரமாரியாக கல்லால் தாக்கினார்களாம். இதில் பலத்த காயம் அடைந்த அமல்ராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் கொலை முயற்சி வழக்குப் பதிந்து, செண்பகராஜ் மற்றும் ஒரு இளஞ்சிறாரை கைது செய்தார். மேலும் 2பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிஎம் கிசான் திட்டத்தில் 13வது தவணை தொகை பெற அஞ்சல்துறை அழைப்பு
புதன் 8, பிப்ரவரி 2023 8:31:04 PM (IST)

பேருந்துகள் செல்ல இடையூறாக உள்ள பள்ளி சுற்று சுவரினை அகற்ற வேண்டும்: ஆணையர் வேண்டுகோள்
புதன் 8, பிப்ரவரி 2023 5:46:00 PM (IST)

வட்டாட்சியரின் குழந்தைகளை மனைவியிடம் ஒப்படைக்க தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு!
புதன் 8, பிப்ரவரி 2023 4:05:00 PM (IST)

ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மறைவு : காவல் துறையினர் அஞ்சலி
புதன் 8, பிப்ரவரி 2023 3:06:15 PM (IST)

தூத்துக்குடியில் புதிய சிமெண்ட் சாலை பணிகள்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
புதன் 8, பிப்ரவரி 2023 12:37:39 PM (IST)

விரால் மீன் உற்பத்தி தொழில்நுட்பம்: பிப்.17ல் ஒரு நாள் வளாக பயிற்சி
புதன் 8, பிப்ரவரி 2023 12:26:58 PM (IST)
