» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
எல்ஐசி சார்பில் மாணவ, மாணவியருக்கு விருது வழங்கும் விழா
வெள்ளி 2, டிசம்பர் 2022 9:13:51 PM (IST)
வேம்பார் அருகில் உள்ள கே.தங்கம்மாள்புரம் பள்ளியில் சிறந்த மாணவ, மாணவியருக்கு எல்.ஐ.சி நிறுவனம் சார்பாக விருது வழங்கப்பட்டது.
திருவல்வேலி கோட்டம் கோவில்பட்டி உட்கோட்டம் விளாத்திகுளத்தில் செயல்படும் (எஸ்ஓஎஸ்) இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் சார்பில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வாரு கல்யாண்டும் சிறந்த பள்ளியை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறந்த மாணவர் விருதும் பாராட்டு சான்றிழ் மற்றும் கேடயமும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2021 - 2022ம் கல்வியியாண்டிற்கான சிறந்த பள்ளியாக கே.தங்கம்மாள்புரம் இந்து கணபதி காசிநாதன் உயர்நிலைப்பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு பள்ளில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களை ஊக்கப்படுக்கும் வகையில் சென்ற கல்வியாண்டில் கல்வியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம், மற்றும் சேமிக்கும் பழக்கம் உருவாக்கும் வகையில் சேமிப்பு உண்டியலும் வழங்கப்பட்டது.
விழாவில் விளாத்திகுளம் (எஸ்ஓஎஸ்) கிளை மேலாளர் செந்தில்குமார், வளர்ச்சி அதிகாரி சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். விழாவில் பள்ளியின் செயலர் பார்த்திபன் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியை உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில்பட்டி அலுவலக முகவர் ராஜசேகர் செய்திருந்தார். நிறைவில் பசுமை வளத்தை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வும் நடைபெற்றது. நிறைவாக பள்ளியின் செயலர் பார்த்திபன் நன்றி தெருவித்தார்.