» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பெண் மர்ம சாவு: போலீசார் விசாரணை

வெள்ளி 2, டிசம்பர் 2022 8:34:56 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டிற்குள் ரத்தக் காயத்துடன் இறந்து கிடந்த பெண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி திருச்செந்தூர் ரோடு கருணாநிதி நகரை சேர்ந்தவர் கண்ணன் மனைவி பார்வதி (50) இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணன் இறந்து விட்டாராம். அதன் பின்பு பார்வதி தனது மகன், மகளுடன் சேர்மாதேவியில் வசித்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு பார்வதி நாகர்கோவிலைச்  சேர்ந்த சுரேஷ் என்பவர் உடன் தூத்துக்குடி கருணாநிதி நகரில் தனியாக வீட்டில் வசித்து வந்தாராம். 

இந்நிலையில் பார்வதி வீட்டில் படுக்க அறையில் இறந்து கிடந்தாராம். இது குறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் சப் இன்ஸ்பெக்டர் கெங்கநாத பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பார்வதி உடம்பில் ரத்தக்காயம் இருப்பது தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory