» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வாலிபர் கொடூர கொலை : நண்பர் வெறிச்செயல்!
வெள்ளி 2, டிசம்பர் 2022 3:34:31 PM (IST)
தூத்துக்குடியில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் நண்பரை கல்லால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தேவர் காலனியைச் சேர்ந்தவர் கொம்பையா மகன் பூல்பாண்டி (45), சில்வர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் திருமணி மகன் மாரிமுத்து (35). இருவரும் நண்பர்கள், கூலி வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று பிற்பகலில் இருவரும் சின்ன கண்ணுபுரம் பகுதியில் மது அருந்தியபோது அவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து, பூல்பாண்டியின் முகத்தில் கல்லால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த பூல்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப் பதிந்து, மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்கைக்கு உட்பட பகுதிகளில் கடந்த 2 நாட்களில் 3 கொலைகள் நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
எதுக்குDec 4, 2022 - 02:12:30 PM | Posted IP 162.1*****
எடுத்தாலும் திராவிடம் சொல்ல வந்துடுவானுங்க நாய்ங்க... கவர்ன்மென்ட் விக்கலனா ப்ரைவேட் விக்க போறான்...
தமிழன்Dec 2, 2022 - 08:40:01 PM | Posted IP 162.1*****
வாழ்க டாஸ்மாக் வாழ்க திராவிடம்
தமிழ்ச்செல்வன்Dec 5, 2022 - 10:02:59 AM | Posted IP 162.1*****