» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு போக்குவரத்துக் கழக நடத்துனர் பணி நிறைவு பாராட்டு விழா!

வெள்ளி 2, டிசம்பர் 2022 10:32:23 AM (IST)



தூத்துக்குடியில் பணி ஓய்வு பெற்ற, அரசு போக்குவரத்துக் கழக நடத்துனருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி புறநகர் பனிமனை கிளையில் கடந்த 16.05.1987 முதல் 36 வருடங்கள் நடத்துனராக பணிபுரிந்து 30.11.22 அன்று ஓய்வுப் பெற்ற ஜெ. ராஜ்குமார் ரொனால்டு பணி ஓய்வுபெற்றதையொட்டி பிரிவு உபசார விழா புறநகர் பனிமனை கிளையில் நடைபெற்றது. திருநெல்வேலி, தூத்துக்குடி மண்டலத்தில் நடத்துனராக பணியாற்றிய ஜெ.ராஜ்குமார் ரொனால்டு சிறப்பாக பணியாற்றியமைக்காக பணி ஓய்வு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் தூத்துக்குடி புறநகர் பணிமனை கிளை மேலாளர் பாலசுப்பிரமணியன், உதவி பொறியாளர் கண்ணப்பன், தொமுச சங்க தூத்துக்குடி புறநகர் பனிமனை நிர்வாகிகளான தலைவர் முருகன், செயலாளர் சந்திரன், பொருளாளர் விஜயகுமார் உட்பட தொழிற்சங்க பிரமுகர்கள், அனைத்துக் கட்சியை சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory