» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எலக்ட்ரீசியன் கொலை: 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் நீதிமன்றத்தில் சரண்

வெள்ளி 2, டிசம்பர் 2022 8:17:25 AM (IST)

தூத்துக்குடியில் எலக்ட்ரீசியன் கொலையில் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்த 2 சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க தூத்துக்குடி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தூத்துக்குடி கதிர்வேல்நகரை சேர்ந்தவர் பெரியநாயகம் (60). எலக்ட்ரீசியன். இவர் நேற்று முன்தினம் மாலையில் மோட்டார் சைக்கிளில் பாரதிநகர் பகுதியில் வந்து கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் பெரியநாயகத்தை வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், இறந்த பெரியநாயகம் ராஜகோபால்நகர் பகுதியில் உள்ள ஒரு இறைச்சிக் கடையில் ஒயரிங் செய்து கொடுத்து இருந்தாராம். இந்நிலையில் கடையில் பணியாற்றிய பாலமுருகன் என்பவர் சுவிட்சை போட்ட போது, மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். இதனால் பெரியநாயகம் சரிவர ஒயரிங் செய்யாததால் பாலமுருகன் இறந்ததாக, அவரது உறவினர் பழனிகுமார் மற்றும் நண்பர்கள் கருதினர். இதன் காரணமாக அவர்கள் பெரியநாயகத்தை வெட்டிக் கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் பழனிகுமாரை தேடி வந்தனர்.

நேற்று மாலையில் பழனிகுமார் மற்றும் 17, 18 வயது சிறுவர்கள் 2 பேர், கொலை வழக்கில் ஈடுபட்டதாக மதுரை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தனர். அவர்களை சிப்காட் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory