» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் இளம்பெண்ணிடம் செல்போன் பறித்த 2பேர் கைது
வியாழன் 1, டிசம்பர் 2022 8:52:58 PM (IST)
தூத்துக்குடியில் இளம்பெண்ணிடம் செல்போன் பறித்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள குறுக்குச்சாலை ஜெக வீரபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராஜ் மகள் முருகேஸ்வரி (26), இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 29ஆம் தேதி வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக மணிநகர் ரோட்டில் செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் இவரது செல்போனை பறித்து சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து முருகேஸ்வரி மத்தியபாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் தூத்துக்குடி கே.வி.கே., நகர் மேற்கு பகுதியை சேர்ந்த கணேசன் மகன் அருள் முத்துமணி (24), சக்தி விநாயகர் புரத்தைச் சேர்ந்த இருளப்பன் மகன் மணிகண்டன் (27) ஆகிய 2பேரும் செல்போன் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து,. ரூ.10ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுபான்மையினருக்கு கடனுதவி: ஆட்சியர் தகவல்!
புதன் 1, பிப்ரவரி 2023 12:21:28 PM (IST)

ஆடு திருடிய 3பேர் கைது : ஆட்டோ பறிமுதல்!
புதன் 1, பிப்ரவரி 2023 12:06:28 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை: 3 பேர் கைது
புதன் 1, பிப்ரவரி 2023 12:03:16 PM (IST)

பிசி, எம்பிசி மக்களுக்கு ரூ.15லட்சம் வரை கடன் உதவி : ஆட்சியர் தகவல்!
புதன் 1, பிப்ரவரி 2023 11:52:39 AM (IST)

ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் வாழ்த்து!
புதன் 1, பிப்ரவரி 2023 11:43:58 AM (IST)

தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டி பிறந்த நாள் விழா
புதன் 1, பிப்ரவரி 2023 11:02:00 AM (IST)
