» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாலிபர் கொடூர கொலை; தூத்துக்குடியில் பயங்கரம்: இளஞ்சிறார் உட்பட 2பேர் கைது!
ஞாயிறு 25, செப்டம்பர் 2022 10:49:45 AM (IST)
தூத்துக்குடியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கொலை செய்த இளஞ்சிறார் உட்பட 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்திற்கு நேற்று இரவு 11 மணியளவில் தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் மீளவிட்டான் ரோட்டில் சின்னகன்னுபுரம் மதுபான கடை அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்தில் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். உடனே இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஸ்டீபன் ஜோஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ஒரு வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்த கார்த்தி (27) என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் 2 நாட்களுக்கு முன்பு இரவு அந்த கட்டிடத்தில் கார்த்தி மது குடிக்க சென்றதும், அங்கு மது குடித்து கொண்டிருந்த அழகேசபுரத்தை சேர்ந்த ராம்தேவ் மற்றும் 17 வயது சிறுவன் ஒருவனுடன் கார்த்தி தகராறு செய்ததும், அப்போது ஏற்பட்ட மோதலில் ராம்தேவ், சிறுவன் ஆகிய 2 பேரும் கார்த்தியை அடித்து கொலை செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி ராம்தேவ், சிறுவன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
NameSep 25, 2022 - 02:09:03 PM | Posted IP 162.1*****