» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் கைது

ஞாயிறு 25, செப்டம்பர் 2022 10:39:51 AM (IST)

கோவில்பட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே நக்கலமுத்தன் பட்டியில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக நாலாட்டின்புத்தூா் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததாம். அதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் சுப்புராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தியதில், அங்கு புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து, மா.சீனியம்மாளை(55) கைது செய்து, கடையில் இருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய நக்கலமுத்தன்பட்டியைச் அய்யலுசாமி மகன் மாரிச்சாமி, சண்முகவேல் மகன் கருப்பசாமி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory