» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் திரிந்த ஆதரவற்ற முதியோர்கள் மீட்பு: காப்பகங்களில் ஒப்படைப்பு!
சனி 24, செப்டம்பர் 2022 5:51:55 PM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் ஆதரவற்ற முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 40 பேர் இன்று மீட்கப்பட்டு காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சி பகுதிகள் மற்றும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் இருக்கும் ஆதரவற்ற முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளை மீட்டு காப்பகங்களில் ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதனடிப்படையில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஹாரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ஆகியோர் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகம் மற்றும் திருச்செந்தூர் நகராட்சி பகுதிகளில் ஆங்காங்கே இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் உழைத்து வாழ முடியாத மாற்றுத்திறனாளிகள் 40 பேரை கண்டறிந்து மீட்டு முதியோர் மற்றும் மனநல காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
கோவில்பட்டி ஆக்டிவ் மைன்ட் மனநல காப்பகத்திற்கு 6 பேர், நாசரேத் நல்ல சமாரியான் அறக்கட்டளைக்கு 4 பேர், ஆறுமுகநேரி லைட் முதியோர் இல்லத்திற்கு 30 பேர் என மொத்தம் 40 நபர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிகழ்வில் திருச்செந்தூர் நகராட்சி துணைத் தலைவர், திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் அவர்களின் உதவியாளர் வேல் ராமகிருஷ்ணன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், திருச்செந்தூர் வருவாய் ஆய்வாளர், கீழ திருசெந்தூர் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆய்வு
சனி 3, ஜூன் 2023 11:35:40 AM (IST)

கலைஞர் 100வது பிறந்தநாள் மரக்கன்றுகள் நடும் திட்டம்: மேயர் தொடங்கி ஜெகன் பெரியசாமி வைத்தார்!
சனி 3, ஜூன் 2023 11:23:56 AM (IST)

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் மரணம்? போலீஸ் விசாரணை
சனி 3, ஜூன் 2023 11:02:02 AM (IST)

பைக் விபத்தில் கொத்தனார் பரிதாப சாவு!
சனி 3, ஜூன் 2023 10:56:04 AM (IST)

கோவில் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
சனி 3, ஜூன் 2023 10:50:14 AM (IST)

தூத்துக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழா : அமைச்சர் கீதாஜீவன் மரியாதை
சனி 3, ஜூன் 2023 10:43:40 AM (IST)
