» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தி.மு.க மாவட்ட செயலாளர் தேர்தல் : அமைச்சர் கீதாஜீவன் மனு தாக்கல்!!
வியாழன் 22, செப்டம்பர் 2022 3:16:17 PM (IST)

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் பதவிக்கு அமைச்சர் கீதாஜீவன் மனு தாக்கல் செய்தார்.
தி.மு.கவின் 15-வது உட்கட்சித் தேர்தல் நடந்து வருகிறது. ஒன்றியம், நகரம், பகுதி, வட்டம் என அத்தனை மட்டங்களிலும் தேர்தல் முடிந்துவிட்டது. இப்பதவிகளுக்கு தலைமையான மாவட்டச் செயலாளர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 22 முதல் 24 வரையில் நடைபெறுகிறது. இதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.முக. மாவட்டச் செயலாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.
இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு அமைச்சர் கீதாஜீவன் விருப்ப மனு அளித்துள்ளார். தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் திமுகவினர் உடன் இருந்தனர். இதுபோல் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார். குமரி மாவட்ட செயலாளர் பதவிக்கு ஜோசப்ராஜ் மனு தாக்கல் செய்தார். தேர்ந்தெடுக்கப்படும் மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் இந்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!
புதன் 27, செப்டம்பர் 2023 12:49:18 PM (IST)

சாலையில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகை பவளப்பாம்பு: வனத்துறையிடம் ஒப்படைப்பு!
புதன் 27, செப்டம்பர் 2023 12:03:10 PM (IST)

திருச்செந்தூரில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு: போராட்டம் நடத்த ஊர் மக்கள் முடிவு
புதன் 27, செப்டம்பர் 2023 11:16:00 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் மீது கார் மோதல்: வாலிபர் பலி!
புதன் 27, செப்டம்பர் 2023 10:54:11 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை : கோட்டாட்சியர் விசாரணை!
புதன் 27, செப்டம்பர் 2023 10:47:50 AM (IST)

பைக் விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலி!
புதன் 27, செப்டம்பர் 2023 10:40:33 AM (IST)

NameSep 22, 2022 - 04:08:53 PM | Posted IP 162.1*****