» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நெடுஞ்சாலையில் எச்சரிக்கை பலகை திருடிய 3பேர் கைது
வெள்ளி 5, ஆகஸ்ட் 2022 9:09:10 PM (IST)
விளாத்திகுளம் அருகே நெடுஞ்சாலையில் எச்சரிக்கைபலகை திருடிய 3பேரை போலீசார் கைது செய்தனர்.
விளாத்திகுளம் - தூத்துக்குடி செல்லும் சாலையில், நெடுஞ்சாலை துறையின் சார்பில், விபத்து பகுதி மற்றும் வளைவு பகுதிகளில் முன்னெச்சரிக்கை இரும்பு பலகைகள் மற்றும் பிரதிபலிப்பான் இரும்பு பலகைகள் வைக்கப்பட்டு பராமரிப்பு மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் விளாத்திகுளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்திற்கும் - மீனாட்சிபுரம் கிராமத்திற்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த 10 எச்சரிக்கை இரும்பு பலகைகள் மற்றும் 11 பிரதிபலிப்பாக இரும்பு பலகைகள் திருட்டப்பட்டது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் ஆதியப்பன் கொடுத்த புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீசார் நேற்று இரவு இந்த இரும்பு பலகைகளை திருடிய வேம்பாரைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் அந்தோணி ஜேம்ஸ் (வயது 25), நரிப்பையூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிமுத்து மகன் கருப்பசாமி (42) மற்றும் ராமசாமி மகன் ஆத்தி (42) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இத்திருட்டுக்கு பயன்படுத்திய மினிவேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் 3 பைக் திருட்டு : வாலிபர் கைது!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 11:12:06 AM (IST)

கார் மோதி முதியவர் பலி: டிரைவர் கைது
செவ்வாய் 3, அக்டோபர் 2023 11:05:01 AM (IST)

தூத்துக்குடியில் காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 10:41:27 AM (IST)

தமிழ்நாட்டில் அனைத்து அதிகாரங்களும் ஒரு குடும்பத்தின் பிடியில் உள்ளது: கிருஷ்ணசாமி
செவ்வாய் 3, அக்டோபர் 2023 10:15:10 AM (IST)

பைக்கை சேதப்படுத்தி, வாலிபரை தாக்கிய 2பேர் கைது!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 8:12:19 AM (IST)

பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 3, அக்டோபர் 2023 8:08:47 AM (IST)
