» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் : ரசிகர்கள் மரக்கன்றுகள் வழங்கல்
சனி 21, மே 2022 12:04:07 PM (IST)
உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் முதல் காட்சியை மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் தூத்துக்குடியில் தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மகனும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.,வும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் நேற்று தமிழகமெங்கும் திரையிடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் இத்திரைப்படம் 4 இடத்தில் வெளியாகியுள்ளது. தூத்துக்குடியில் பாலகிருஷ்ணா மற்றும் பெரிசன் பிளாசாவிலும், கோவில்பட்டியில் சத்தியபாமா மற்றும் சண்முகா திரையரங்கிலும் வெளியாகியுள்ளது. அனைத்து திரையரங்கிலும் இப்படத்தின் முதல் காட்சியை ரசிகர்கள் கூட்டம் ஆரவாரத்துடன் கொண்டாடினர்.
இதில் தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பால்துரை தலைமையிலும், மாநகர தலைவர் ஏ.பி.ஆர்.ஜோ முன்னிலையிலும் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கேக் வெட்டி, மரக்கன்றுகள் கொடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் திரைப்படத்தை காண வந்த ரசிக பெருமக்களை மாவட்ட துணைச் செயலாளர் காளி இனிப்புகள் கொடுத்து வரவேற்றார்.
திரைப்படத்தின் முதல் காட்சியை மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி ஜோயல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். மேள தாளத்துடன் வெடி வெடித்து கேக் வெட்டி ரசிகர்களின் ஆரவாரத்துடன் முதல் காட்சி தொடங்கியது. நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை காண வந்த ரசிக பெரு மக்களுக்கு மாநகர உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.
தூத்துக்குடியில் வெளியான உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி திரைப்பட விழாவில் மாவட்ட துணைச் செயலாளர் தளபதி முருகன் மற்றும் திமுக இளைஞரணி விமல் ஜீ, மாவட்ட பொருளாளர் இளையவேந்தன் சேக்முகமது, மாநகர செயலாளர் கோயில்பிள்ளைவிளை ராஜா, மாநகர பொருளாளர் முகமத் மற்றும் துணைத் தலைவர்கள் முருகேசன், துணைச் செயலாளர் டினோ, துணை பொருளாளர் கார்த்தி, மேலும் பால், டி.கே. தினேஷ், பிரகாஷ், ரவி, வள்ளி , பன்னீர், மாயா, ரகு, ஆஹாஸ், அபிஸ் உட்பட மாவட்ட மற்றும் மாநகர பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.