» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குரூப் 2 தேர்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 30,784 பேர் எழுதுகிறார்கள்!

வெள்ளி 20, மே 2022 11:34:10 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 105 தேர்வு மையங்களில் 30,784 விண்ணப்பதாரர்கள் குரூப் 2 தேர்வு தேர்வு எழுத உள்ளனர்.

இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தொகுதி II/IIA-ல் அடங்கிய பணிகளுக்கான தேர்வுகள் நாளை (21.05.2022) முற்பகல் 09.30 முதல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. தூத்துக்குடி, கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் 4 வட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் மொத்தம் 30,784 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

தூத்துக்குடியில் 51 தேர்வு மையங்களில் 15295 பேரும், கோவில்பட்டியில் 32 மையங்களில் 9104 பேரும், ஸ்ரீவைகுண்டத்தில் 6 மையங்களில் 1638பேரும், திருச்செந்தூரில் 16 மையங்களில் 4747 பேர் என மொத்தம் 105 தேர்வு மையங்களில் 30, 784 தேர்வு தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வு பணிக்கென 22 கண்காணிப்பு குழுக்களும் மற்றும் கண்காணிப்பு பணிக்கென துணை ஆட்சியர் நிலையில் 12 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளவாறு உரிய நேரத்தில் தேர்வுக்கூடத்தில் ஆஜராகிட வேண்டும். தேர்வு தொடங்கி 30 நிமிடத்திற்கு பின்னர் வருகை தரும் விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

தேர்வுக் கூடத்திற்குள் பேஜர், செல்போன், கால்குலேட்டர், தகவல்கள் பதிவு செய்யும் மின் சாதனங்கள், குறிப்பேடு, புத்தகங்கள், உறைகள் மற்றும் கைப்பைகள் போன்றவை கொண்டு செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு மையங்களுக்கு உரிய போக்குவரத்து வசதிகள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

ஒருவன்மே 20, 2022 - 04:17:17 PM | Posted IP 162.1*****

ஒவ்வொரு தேர்வு மையத்தில் தேர்வு முடிக்கும் அரை மணி நேரத்திற்கு முன்பே பஸ் ஸ்டாண்ட் செல்லும் மினிபஸ் நிறுத்த வசதி ஏற்படுத்துங்கள் தேர்வு எழுதி முடித்து வீட்டுக்கு செல்பவர்களுக்கு வசதியாக இருக்கும்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory