» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குரூப் 2 தேர்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 30,784 பேர் எழுதுகிறார்கள்!
வெள்ளி 20, மே 2022 11:34:10 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 105 தேர்வு மையங்களில் 30,784 விண்ணப்பதாரர்கள் குரூப் 2 தேர்வு தேர்வு எழுத உள்ளனர்.
இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தொகுதி II/IIA-ல் அடங்கிய பணிகளுக்கான தேர்வுகள் நாளை (21.05.2022) முற்பகல் 09.30 முதல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. தூத்துக்குடி, கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் 4 வட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் மொத்தம் 30,784 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
தூத்துக்குடியில் 51 தேர்வு மையங்களில் 15295 பேரும், கோவில்பட்டியில் 32 மையங்களில் 9104 பேரும், ஸ்ரீவைகுண்டத்தில் 6 மையங்களில் 1638பேரும், திருச்செந்தூரில் 16 மையங்களில் 4747 பேர் என மொத்தம் 105 தேர்வு மையங்களில் 30, 784 தேர்வு தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வு பணிக்கென 22 கண்காணிப்பு குழுக்களும் மற்றும் கண்காணிப்பு பணிக்கென துணை ஆட்சியர் நிலையில் 12 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளவாறு உரிய நேரத்தில் தேர்வுக்கூடத்தில் ஆஜராகிட வேண்டும். தேர்வு தொடங்கி 30 நிமிடத்திற்கு பின்னர் வருகை தரும் விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வுக் கூடத்திற்குள் பேஜர், செல்போன், கால்குலேட்டர், தகவல்கள் பதிவு செய்யும் மின் சாதனங்கள், குறிப்பேடு, புத்தகங்கள், உறைகள் மற்றும் கைப்பைகள் போன்றவை கொண்டு செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு மையங்களுக்கு உரிய போக்குவரத்து வசதிகள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.
ஒருவன்மே 20, 2022 - 04:17:17 PM | Posted IP 162.1*****