» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டத்தை 2ஆக பிரிக்க வலியுறுத்தி மே 22ல் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 20, மே 2022 10:41:04 AM (IST)
தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டத்தை இரண்டாக பிரித்து வடக்கன்குளம் மறைமாவட்டம் உருவாக்க வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் சாத்தான்குளத்தில் வரும் 22ஆம் தேதி மாலை நடக்கிறது.
தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டத்தை பிரித்து வடக்கன்குளம் புதிய மறைமாவட்டம் உருவாக்க கோரி கத்தோலிக்க கூட்டமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் வள்ளியூர் மறை மண்டல கத்தோலிக்க கூட்டமைப்பு சார்பில் ஆயர் ஸ்டீபன் அவர்களை வடக்கன்குளம் புதிய மறை மாவட்டம் உருவாக்கிட ஆயத்த பணிகளைமேற்கொள்ள வலியுறுத்தி சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் 22ஆம் தேதி மாலை நடக்கிறது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் கார்ல்லஸ் தலைமை வகிக்கிறார்.
செயற்குழு உறுப்பினர்கள் பொன்னம்பலம, மரிய மிக்கேல்,ஆடிட்டர் மைக்கேல், சட்ட ஆலோசகர்கள் மனோகரன், ஜோசப் அலெக்ஸ், கூட்டமைப்பு துணை தலைவர் லூர்து மணி, ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.. இணைச் செயலாளர் முரசொலிமறன் வரவேற்கிறார். இதில் புதிய மறைமாவட்ட விளக்க கையேடு வெளியிடப்படுகிறது. கூட்டமைப்பு பொது செயலாளர் ஜான் ததே யூஸ் விளக்கவுரையாற்றுகிறார். இதில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பலர் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர். கூட்டமைப்பு உதவி பொருளாளர் மைக்கேல் நன்றி கூறுகிறார்.