» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் விபத்து : முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பலி
வியாழன் 19, மே 2022 2:56:48 PM (IST)
எட்டயபுரம் அருகே பைக் விபத்தில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள கருப்பூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சித்தவன் (75). கருப்பூர் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவரான இவர் நேற்று புதூர் யூனியன் அலுவலகத்திற்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். வடக்கு முத்தலாபுரம் அருகே பைக் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.