» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம்!

வியாழன் 19, மே 2022 12:27:15 PM (IST)



ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் துணி கட்டி அறப்போராட்டம் நடத்தினர். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனை உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையொட்டி தூத்துக்குடியில் பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐஎன்டியூசி மாநில அமைப்புச் செயலாளர் பெருமாள்சாமி தலைமையில் வாயில் துணி கட்டி காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம் நடத்தினர். 



முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேனியல்ராஜ் போராட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி, அமைப்புசாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநில பேச்சாளர் அம்பிகாபதி, மாநகர் செயலாளர் இக்னேஷியஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா, கலை பிரிவு மாவட்ட தலைவர் பெத்துராஜ், மேற்கு மண்டல தலைவி செல்லதாய், இளைஞர் காங்கிரஸ் மாநகர பொது செயலாளர் நம்பி சங்கர், தனசேகரன், மீனவரணி மிக்கேல் குரூஸ், சம்சுதீன், ஏசுதாஸ், மாப்பிளையூரணி சிலுவை அந்தோனி, உட்பட பலர் கலந்து கொண்டனர். 

தூத்துக்குடி முத்தையாபுரம் பஜாரில் தூத்துக்குடி பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சகாயராஜ் தலைமையில், மாநகர துணைத் தலைவர்கள் பிரபாகரன், ராஜாராம், மாநகர் இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் மரிய வியாகுல பாரகன், முள்ளக்காடு காங்கிரஸ் தலைவர் முனிய தங்க நாடார், ராமலிங்கம், கிருஷ்ணன், முருகன், உட்பட பலர் வாயில் வெள்ளை துணி கட்டி அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோல் பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். 



மக்கள் கருத்து

தொல்லைமே 19, 2022 - 02:18:23 PM | Posted IP 162.1*****

ராகுல் காந்தி , சோனியா அப்போவே மன்னித்து விட்டார்கள், இந்த அரசியல்வாதிகள் தொல்லை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory