» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவி கொலை வழக்கில் கைதானவர் உட்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வியாழன் 19, மே 2022 12:16:08 PM (IST)
தூத்துக்குடியில் மனைவி கொலை வழக்கில் கைதானவர் உட்பட 3 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி பூபல்ராயர்புரம் பகுதியை சேர்ந்த விஜி (40) என்ற பெண்ணை குடும்ப பிரச்சினை காரணமாக கொலை செய்த வழக்கில் அவரது கணவரான கிருஷ்ணன் (எ) ஆரோக்கிய சேவியர் மகன் சகாயவினோத் (38) என்பவரை கடந்த 19.04.2022 வடபாகம் போலீசார் கைது செய்தனர். இதுபோல் ஆறுமுகநேரி சீனந்தோப்பு விலக்கு பகுதியில் ஓருவரை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் வடக்கு காமராஜபுரம் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் முருகன் (எ) பாம்பே முருகன் (47), ஆறுமுகநேரி காமராஜபுரம் பகுதியை சேர்ந்த யோவான் மகன் ஜெபராஜ் (27) மற்றும் முத்து மகன் சதீஷ் (24) ஆகியோரை ஆறுமுகநேரி போலீசார் கைது செய்தனர்.
மேற்கண்ட இவ்வழக்குகளில் தொடர்புடைய சகாய வினோத், முருகன் (எ) பாம்பே முருகன் மற்றும் ஜெபராஜ் ஆகிய 3 பேரையும் எஸ்பி பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். இதற்கான ஆணையை சம்பந்தபட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினர். இந்த ஆண்டு இதுவரை போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 23 பேர் உட்பட 100 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதத்தில் 30 நாட்களில் 30 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.