» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வாலிபருக்கு கத்திக்குத்து: 5பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
வியாழன் 19, மே 2022 11:54:10 AM (IST)
தூத்துக்குடியில் முன் விராேதத்தில் வாலிபரை கத்தியால் குத்திய அண்ணன்-தம்பி உட்பட 5பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் சந்தனகுமார் (18). மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் மல்லி மகன் பாண்டி (21). இவர்கள் இருவரும் சங்குகுளி தொழிலாளர்கள். இருவர் இடையே முன் விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை மேட்டுப்பட்டி கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த பாண்டியிடம் சந்தனகுமார், அவரது அண்ணன் ரவி உட்பட 5பேர் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தினார்களாம். இதில் காயம் அடைந்த பாண்டி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) வனிதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.