» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வாலிபருக்கு கத்திக்குத்து: 5பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

வியாழன் 19, மே 2022 11:54:10 AM (IST)

தூத்துக்குடியில் முன் விராேதத்தில் வாலிபரை கத்தியால் குத்திய அண்ணன்-தம்பி உட்பட 5பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:  தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் சந்தனகுமார் (18). மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் மல்லி மகன் பாண்டி (21). இவர்கள் இருவரும் சங்குகுளி தொழிலாளர்கள். இருவர் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. 

இந்நிலையில், நேற்று மாலை மேட்டுப்பட்டி கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த பாண்டியிடம் சந்தனகுமார், அவரது அண்ணன் ரவி உட்பட 5பேர் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தினார்களாம். இதில் காயம் அடைந்த பாண்டி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) வனிதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory