» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மே 22ல் மது விற்பனைக்கு தடை: ஆட்சியர் உத்தரவு!
புதன் 18, மே 2022 4:29:59 PM (IST)
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு 4ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வருகிற 22ம் தேதி மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : ஸ்டெர்லைட் சம்பவம் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 22.05.2022 அன்று தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை/பார்) விதிகள, 2003 விதி 12 துணை விதி (1) இன் படி பட்டியலில் கண்ட 54 மதுபான கடைகளும் / பார்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் மேற்படி நாளில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் அன்றைய தினம் மதுபான விற்பனை நடைபெறக் கூடாது.
மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓர்pடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதன்படி, தூத்துக்குடியில் உள்ள 54 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுகிறது.