» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பணியிடம் : ஜூன் 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!
புதன் 18, மே 2022 3:28:32 PM (IST)
தூத்துக்குடியில் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் இரவு காவலர் மற்றும் தூய்மைப் பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக மைய கட்டிடத்தில் காலியாகவுள்ள முழு நேர இரவு காவலர் மற்றும் தூய்மைப் பணியாளர் பணியிடம் ஒன்று தற்காலிக தினக்கூலி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இப்பணியிடத்திற்கு தமிழ் எழுதப்படிக்க தெரிந்த ஆண் நபர்களாக இருக்க வேண்டும். மேலும் 01-01-2022 அன்று 25 வயதிற்கு மேல் 45 வயது முடியாதவராக இருக்க வேண்டும்.
இப்பணியிடத்திற்கு SC Aruthathiyar –க்கு முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது. இப்பணியிடம் முற்றிலும் தற்காலிக பணியிடம், இப்பணியிடத்திற்கான ஊதியம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் நிர்ணயம் செய்யப்பட்ட தினக்கூலி அடிப்படையில் வழங்கப்படும். எனவே விருப்பமும் தகுதியுள்ள உள்ள நபர்கள் 10-06-2022-க்குள் உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.