» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு
செவ்வாய் 1, பிப்ரவரி 2022 8:27:24 AM (IST)
சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் காவல் துறையினருக்கு இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தெற்கு மண்டலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் 2020 ஆம் ஆண்டு சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு விதமாக ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் தலைவர் தேன் ராஜா, தலைமையில் கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களை இனிப்பு வழங்கி பாராட்டினார்.
மேலும் காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன், ஆய்வாளர் சுஜித் ஆனந்த், மற்றும் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் பொது மக்களுக்கு சிறந்த சேவை அளிக்க வாழ்த்தினர். இந்நிகழ்வில் தொண்டு நிறுவன நிர்வாக குழு உறுப்பினர் முத்து மாரியப்பன், ராமசுப்ரமணியன் உடற் கல்வி ஆசிரியர் நவீன் பாலாஜி, மேற்பார்வையாளர் மாடசாமி, கலந்து கொண்டனர்.
வே.எட்டப்பன்Mar 12, 2023 - 04:32:37 AM | Posted IP 162.1*****