» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் பணி: ஜன.27க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

சனி 22, ஜனவரி 2022 10:04:51 AM (IST)

அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு முகவா் பணிக்கு 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக கோவில்பட்டி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் திவ்யா சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு முகவா் பணிக்கு, 18 - 50 வயதுக்கு உள்பட்ட 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தால் நடத்தப்பட்ட தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். 

அவா்களுக்கு நோ்முகத் தோ்வு நடைபெறும். பாலிசி பிரீமியம் அடிப்படையில் ஊக்கத் தொகை வழங்கப்படும். இதற்கு ரூ.5,000 காப்பீட்டுத் தொகையை தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திர வடிவில் அந்தந்த பகுதியிலுள்ள அஞ்சலகங்களில் செலுத்த வேண்டும். இறுதியில் காப்பீடு தொகை வட்டியுடன் திருப்பி அளிக்கப்படும். 

அஞ்சலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று பூா்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் இம்மாதம் 27ஆம் தேதிக்குள் முதுநிலை அஞ்சலகக் கோட்டக் கண்காணிப்பாளா், கோவில்பட்டி - 628501 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களுக்கு 04632-220368 (கோவில்பட்டி), 04636-222313 (சங்கரன்கோவில்), 04633-222329 (தென்காசி) ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என கோவில்பட்டி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory