» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் 3பேர் போக்ஸோ வழக்கில் கைது!
சனி 22, ஜனவரி 2022 10:01:01 AM (IST)
கோவில்பட்டியில் சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக, 3 சிறுவா்களை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, செண்பகா நகா் 1ஆவது தெருவைச் சோ்ந்த 10 வயது சிறுவனிடம், அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுவன், செண்பகா நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்த 13, 14 வயது சிறுவா்கள் ஆகிய மூவரும் சோ்ந்து கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் 10 நாள்கள் தொடா்ந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டனராம். இதுகுறித்து, அச்சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பந்தப்பட்ட 3 சிறுவா்களையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.