» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் 405 பேருக்கு கரோனா உறுதி : சிகிச்சையில் 2,183 போ்!
சனி 22, ஜனவரி 2022 7:52:08 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 405 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது, 2,183 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று புதிதாக 405 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 60 ஆயிரத்து 914 ஆக அதிகரித்து உள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடியை சேர்ந்த 74 வயது முதியவர் ஒருவர் கரோனா தொற்று காரணமாக இறந்து உள்ளார்.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 426 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று 293 பேர் கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். இதுவரை மொத்தம் 58 ஆயிரத்து 305 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது, 2,183 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.