» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கபடி விளையாட்டில் காயமடைந்தவர் திடீர் மரணம்!
வெள்ளி 21, ஜனவரி 2022 8:39:20 PM (IST)
தூத்துக்குடியில் கபடி விளையாட்டில் காயமடைந்த வாலிபர் திடீரென உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள பிள்ளையன் மனை வக்கூரைச் சேர்ந்தவர் சடையவீரன் மகன் மூக்கன் (37). தொழிலாளியான இவருக்கு மனைவி இசக்கியம்மாள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 16ம் தேதி அதே ஊரில் நடைபெற்ற கபடி போட்டியில் மூக்கன் பங்கேற்று விளையாடினாராம். அப்போது வயிற்றுப் பகுதியில் அடிப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென வலி ஏற்பட்டுள்ளது. இதனால் உறவினர்கள் அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதுகுறித்து மூக்கன் அண்ணன் மாரிமுத்து நாசரேத் போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ சுப்பிரமணியன் வழக்கு பதிந்து விசாரணைை நடத்தி வருகிறார். விளையாட்டில் ஏற்பட்ட காயம் குடற்பகுதியில் உள்காயமாக இருந்ததால் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் : ரசிகர்கள் மரக்கன்றுகள் வழங்கல்
சனி 21, மே 2022 12:04:07 PM (IST)

நாலுமாவடியில் பேவர் பிளாக் சாலை: புதுவாழ்வு சங்கம் ரூ.4 லட்சம் நிதியுதவி!
வெள்ளி 20, மே 2022 5:11:05 PM (IST)

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு புத்தகம்: அமைச்சர் வேலு வெளியிட்டார்
வெள்ளி 20, மே 2022 4:18:07 PM (IST)

தூத்துக்குடியில் மத்திய அரசைக் கண்டித்து மே 26ல் ஆர்ப்பாட்டம்: கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆலோசனை!
வெள்ளி 20, மே 2022 4:03:28 PM (IST)

சரக்கு வேனில் கடத்திய புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : வாலிபர் கைது!
வெள்ளி 20, மே 2022 2:55:50 PM (IST)

கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது!
வெள்ளி 20, மே 2022 2:49:21 PM (IST)
