» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலை தேடி வந்த வாலிபர் மீது கொலைவெறி தாக்குதல் - மூவர் கைது!
வியாழன் 20, ஜனவரி 2022 10:06:01 PM (IST)
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலை தேடி வந்த வாலிபரை தாக்கிய 3பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி கணேசன் காலனி 2வது தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் மாரிச்செல்வம் (17). கிணறு தோண்டுவது போன்ற கூலி வேலைகள் செய்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக வேலை இல்லாதத்தில் பாலவிநாயகர் கோவில் தெருவில் ஸ்மார்ட் சிட்டி காண்ட்ராக்ட் வேலை நடப்பதால் அதில் வேலை தேடி அங்கு அடிக்கடி அந்த பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது ஸ்மார்ட் சிட்டி வேலைக்கான பொருட்களை திருட வந்ததாக கூறி இன்று அவரை அவதூறாக பேசி, இங்கு காணாமல் போன இரும்பு பொருட்களை திருடியது நீ தானே என்று கூறி இரும்பு ராடுகளால் 3பேர் அவரை சராமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயம் அடைந்த மாரிச்செல்வம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் , கோரம்பள்ளம் ஹவுசிங்போர்டு, காலேப் மகன் சாம்குலின்ஸ் (37), தாளமுத்து நகர், கணபதி நகர் கணேஷ்குமார் மகன் சுரேஷ் (20) மற்றும் ஒரு சிறுவனை போலீசார் கைது செய்தனர்.