» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ராட்சத காற்றாலை இறகுகளை கையாண்டு வஉசி துறைமுகம் புதிய சாதனை

வியாழன் 20, ஜனவரி 2022 9:45:24 PM (IST)



ராட்சத காற்றாலை இறகுகளை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளது. 

இது குறித்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் காற்றாலை இறகு மற்றும் உதிரி பாகங்கள் கையாளுவதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் 2 ஆயிரத்து 898 காற்றாலை இறகுகளும், 1,248 காற்றாலை கோபுரங்களும் கையாளப்பட்டு உள்ளன. உலகத்தரம் வாய்ந்த காற்றாலை இறகுகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் உள்ள இட வசதிகள், 8 வழி துறைமுக இணைப்புசாலை, சீரான தேசிய நெடுஞ்சாலை இணைப்பு போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு, வ.உ.சி. துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்கின்றன.

அதன்படி வ.உ.சி. துறைமுகத்தில் 81.50 மீட்டர் நீளமும், 25 டன் எடையும் கொண்ட ராட்சத காற்றாலை இறகுகளை கையாண்டு புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இந்த காற்றாலை இறகுகள் ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்வதற்காக நேற்று கொண்டு வரப்பட்டது. துறைமுகத்தில் உள்ள அதிநவீன பளுதூக்கிகள் மூலம் இந்த காற்றாலை இறகுகள் கப்பலில் ஏற்றப்பட்டன. 142.8 மீட்டர் நீளம் கொண்ட எம்.ஒய்.எஸ்.டெஸ்நேவா என்ற கப்பலில் 81.50 மீட்டர் நீளம் கொண்ட 6 காற்றாலை இறகுகளும், 77.10 மீட்டர் நீளம் கொண்ட12 இறகுகளும் ஏற்றப்பட்டன. தொடர்ந்து கப்பல் ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்றது.

இதனால் காற்றாலை இறகுகளை சிறப்பாக, பாதுகாப்பான முறையில் கையாண்டு சாதனை புரிய உறுதுணையாக இருந்த கப்பல் முகவர்கள், சரக்கு கையாளும் முகவர்கள், போக்குவரத்து மற்றும் ஏற்றுமதியாளர்கள், துறைமுக அதிகாரிகள், ஊழியர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் வருங்காலங்களிலும் காற்றாலை ஏற்றுமதியில் மேம்பட்ட செயல்திறனை அடைய கடினமாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த 2 பேர் கைது!

செவ்வாய் 19, மார்ச் 2024 8:17:29 AM (IST)

வேனில் கொண்டுசென்ற 405 சேலைகள் பறிமுதல்

செவ்வாய் 19, மார்ச் 2024 8:07:38 AM (IST)

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory