» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் முக கவசம் அணியாத மக்களுக்கு காவல்துறை ஆய்வாளர் அறிவுரை!
வியாழன் 20, ஜனவரி 2022 8:40:17 PM (IST)
தூத்துக்குடியில் தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜ், முக கவசம் அணியாத மக்களுக்கு முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கரோனா நோய் பரவலை கட்டுப்படுத்திட பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி அண்ணா நகர் மெயின் ரோட்டில் கண்காணிப்பில் ஈடுபட்ட தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜ், முக கவசம் அணியாத மக்களுக்கு முக கவசம் வழங்கினார். மேலும் முக கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும், இதன் மூலம் நோய்தொற்றில் இருந்து நம்மை தற்காத்து கொள்ளலாம். முக கவசம் அணிந்து வரவில்லை என்றால் அபதாரம் விதிக்கப்படும் என்றும் எடுத்துரைத்தார்.