» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஹெராயின் வழக்கில் மேலும் 4பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
வியாழன் 13, ஜனவரி 2022 12:03:12 PM (IST)
தூத்துக்குடியில் ரூ.21 கோடி மதிப்புடைய ஹெராயின் பதுக்கிய வழக்கில் மேலும் 4பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 21.12.2021 அன்று ரூ.21 கோடி மதிப்புடைய ஹெராயின் போதைப் பொருள் பிடிபட்டது. இது தொடர்பாக 7பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி அண்ணா நகர் மைதீன் மகன் அன்சார்அலி (26), யோஸ்வரர் காலனி முனியசாமி மகன் மாரிமுத்து (26), டூவிபுரம் ஷாஜஹான் மகன் இம்ரான்கான் (27), தருவைகுளம் கோசல்ராம் மகன் பாலமுருகன் (26) ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பிறப்பித்த உத்தரவின் பேரில் அவர்கள் 4பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய 3பேர் ஏற்கனவே குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை நிறைவு: இறுதி அறிக்கை முதல்வரிடம் தாக்கல்!
புதன் 18, மே 2022 5:53:51 PM (IST)

மே 22ல் மது விற்பனைக்கு தடை: ஆட்சியர் உத்தரவு!
புதன் 18, மே 2022 4:29:59 PM (IST)

தூத்துக்குடியில் ஏழை பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் : ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்
புதன் 18, மே 2022 3:57:58 PM (IST)

வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.15 கோடி மோசடி : இணைப் பதிவாளர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
புதன் 18, மே 2022 3:45:30 PM (IST)

முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பணியிடம் : ஜூன் 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!
புதன் 18, மே 2022 3:28:32 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு செல்லும் 1,000 மெட்ரிக் டன் அரிசி: தமிழக அரசு நடவடிக்கை
புதன் 18, மே 2022 3:21:06 PM (IST)
