» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாபர் மசூதி இடிப்பு தினம்: தூத்துக்குடியில் தீவிர சோதனை

திங்கள் 6, டிசம்பர் 2021 8:03:44 AM (IST)

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. பாபர் மசூதி பிரச்சினைக்கு கோர்ட்டு மூலம் ஏற்கனவே தீர்வு காணப்பட்ட நிலையிலும், தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதன்படி நேற்று தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் தீவிர சோதனை நடத்தினர். 

பயணிகளின் உடைமைகள், ரயில் நிலையம் மற்றும் ரயிலில் ஒவ்வொரு பெட்டிகளிலும் சோதனை நடத்தினர். தொடர்ந்து பொதுமக்கள் ரயிலில் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்று வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதில் திரளான போலீசார் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory