» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மண்வள நாள்
திங்கள் 6, டிசம்பர் 2021 7:56:49 AM (IST)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மண்வள நாள் கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நீா்வளச் சூழலியல் மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற மண்வள நாள் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சுஜாத்குமாா் தலைமை வகித்தாா். மீன்வள விரிவாக்க பொருளியல் மற்றும் புள்ளியல் துறை தலைவா் இரா. சாந்தகுமாா், நீா்வளச் சூழலியல் மேலாண்மைத் துறை தலைவா் பத்மாவதி ஆகியோா் பேசினா்.
நிகழ்ச்சியில், நீா்வளச் சூழலியல் மேலாண்மைத்துறையின் இணைப் பேராசிரியா் வே. ராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீன் பண்ணையாளா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.