» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தை வெளியேற்ற நடவடிக்கை : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
வெள்ளி 26, நவம்பர் 2021 11:36:11 AM (IST)
தூத்துக்குடியில் கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு மேற்கொண்டு தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 225 சென்டிமீட்டர் மழை பெய்தது இதன்காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. தூத்துக்குடியில் உள்ள கோரம்பள்ளம் குளம் முழுவதும் நிரம்பி உள்ளது. அதுமட்டுமின்றி காட்டாற்று வெள்ளம் குளத்திற்கு வந்தவண்ணம் உள்ளது. இதை தொடர்ந்து 24 கண்மாயின் மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுபோல் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கனமழையின் காரணமாக மழைநீர் முழுவதும் மருத்துவமனையில் உள்ள பல வார்டுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதை அடுத்து தரைப்பகுதியில் உள்ள நோயாளிகள் அனைவரும் 1வது தளம் இரண்டாவது தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போது தண்ணீர் சூழ்ந்துள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ உள்ளோர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் மருத்துவரை சூழ்ந்துள்ள மழை நீரை அகற்றுவதற்கான துரித நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தற்போது மின் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆய்வின் போது தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரு தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்இதுபோல் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து உள்ள பல பகுதிகளில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. ஆனாலும் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
K.s. DurairajNov 26, 2021 - 09:31:51 PM | Posted IP 162.1*****