» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை: பட்டபகலில் பயங்கரம் - மர்ம நபர்கள் வெறிச்செயல்!

செவ்வாய் 23, நவம்பர் 2021 4:01:09 PM (IST)

தூத்துக்குடியில் பெண் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பட்டப்பகலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி செல்சினி காலனி 2வது தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் சாரதி என்கிற பார்த்த சாரதி (35). ஆட்டோ டிரைவர். இன்று மதியம் 3 மணியளவில் அவரது வீட்டருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 2பேர் அவரிடம் தகராறு செய்து, அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

பெண் விவகாரத்தில இந்த கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பார்த்த சாரதியின் நண்பர் பன்னீர் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதனை அவரது கணவர் கண்டித்துள்ளார். இந்த தகராறில் பார்த்தசாரதி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். பட்டபகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தை டிஎஸ்பி கணேஷ் பார்வையிட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory