» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 26, அக்டோபர் 2021 3:03:55 PM (IST)
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி தூத்துக்குடியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும், பகத்சிங் தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், அரசு மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலையைக் குறைத்திட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை நிறுத்த வேண்டும்.
,
வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வே்ணடும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி சிதம்பரநகர் மெயின் ரோட்டில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சந்தனசேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் சிபிஐ மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ், சிபிஐ மாநகர செயலாளர் ஞானசேகர், மாடசாமி, சுப்ரமணியன், இளைஞர் பெருமன்றம் ராஜாசிங், சோலையப்பன், பெருமாள், காளிஸ்வரன், ஜீவா, பலவேசம், சுப்புத்துரை, ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.