» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அக்.1 முதல் அனுமதி: அமைச்சர் தகவல்!

ஞாயிறு 26, செப்டம்பர் 2021 9:58:45 AM (IST)



குற்றாலம் அருவிகளில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என சுற்றுலாத்துறை அமைச்சர்  மதிவேந்தன் தெரிவித்துள்ளார். 

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் விதிக்கப்பட்ட தடை காரணமாக, தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில், கடந்த 19 மாதங்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. அருவிக்கு யாரையும் அனுமதிக்காததால், அங்குள்ள வியாபாரிகள், தங்கும் விடுதி உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் என பல தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பு மக்களின் கோரிக்கை ஏற்று, விரைவில் குற்றால அருவியில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. தற்போது தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில், குற்றாலம் மற்றும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என சுற்றுலாத்துறை அமைச்சர்  மதிவேந்தன் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory