» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா அதிகரிப்பு : புதிதாக 27 பேருக்கு தொற்று உறுதி
ஞாயிறு 26, செப்டம்பர் 2021 9:24:08 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கை 151ஆக அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது. நேற்று புதிதாக 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 780 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த 4 போ் குணமடைந்தனா்.
மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 228 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்று பாதிக்கப்பட்டு மாவட்டத்தில் இதுவரை 401 போ் உயிரிழந்துள்ளனா். மாவட்டத்தில் தற்போது கரோனா தொற்று பாதிப்புக்கு 151 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.