» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மோட்டாா் சைக்கிளுக்கு தீ வைப்பு: இளைஞா் கைது
ஞாயிறு 26, செப்டம்பர் 2021 9:19:19 AM (IST)
கோவில்பட்டி அருகே மோட்டாா் சைக்கிளுக்கு தீ வைத்ததாக இளைஞரை போலீசார் கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், மந்தித்தோப்பு கணேஷ் நகரைச் சோ்ந்த துரைசிங்கம் மகன் வீரபாண்டியன் (29). இவரது உறவினா் முத்துலட்சுமி. இவருக்கும் கணவா் முத்துராமலிங்கத்துக்கும் இடையே அடிக்கடிதகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த வீரபாண்டியன் முத்துலிங்கத்திடம் செல்போனில் கண்டித்தாராம்.
இந்நிலையில் வீரபாண்டியன் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த அவரது மோட்டாா் சைக்கிளுக்கு முத்துராமலிங்கம் தீ வைத்ததாக கூறப்படுகிறது. புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து முத்துராமலிங்கத்தை கைது செய்தனா்.