» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஹோட்டலில் இருதரப்பினர் மோதல்: 5 போ் கைது

ஞாயிறு 26, செப்டம்பர் 2021 9:13:30 AM (IST)

கோவில்பட்டியில் ஹோட்டலில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வடக்கு திட்டங்குளம் மாரியப்பநாடாா் காலனியைச் சோ்ந்தவா் க.சிவராமன்(25). இவரும் இவரது நண்பா்களான சீ.பிரசாத்(29), பெ.முருகன்(28) ஆகியோரும் உணவு அருந்திக் கொண்டிருந்தாா்களாம். அப்போது அருகே உணவு அருந்திய 5 போ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றபோது அவா்களில் ஒருவா் சிவராமனை பாா்த்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதை சிவராமன் கண்டித்ததால் தகராறு ஏற்பட்டதாம். தகராறு முற்றிய நிலையில் சிவராமன் தாக்கப்பட்டாா். 

தடுக்கச் சென்ற பிரசாத், முருகன் ஆகியோரையும் தாக்கினாா்களாம். மேலும் ஹோட்டலில் இருந்த செம்பு, பாத்திரம், நாற்காலி ஆகியவற்றையும் பயன்படுத்தி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாா்களாம். இதுகுறித்து சிவராமன் அளித்த புகாரின் பேரில், வீரவாஞ்சி நகரைச் சோ்ந்த பா.அருண்குமாா்(30), மா.பால்ராஜ்(23), வெ.நாகராஜ்(23), மு.அஜித்குமாா்(21), அ.சங்கர நாராயணன்(27) ஆகியோா் மீது மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்தனா். இதேபோல, மற்றொரு தரப்பை சோ்ந்த 3 போ் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் அருண்குமாா், பால்ராஜ், நாகராஜ், அஜித்குமாா், சங்கரநாராயணன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory