» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 28 ரவுடிகள் கைது: விடிய விடிய போலீசார் தீவிர ரோந்து

சனி 25, செப்டம்பர் 2021 10:38:07 AM (IST)


தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாள் இரவில் 28 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 அரிவாள், போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நேற்றும் (24.09.2021) இரவு விடிய, விடிய தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டனர். அதில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 28 ரவுடிகள் பிடிக்கப்பட்டு, 11 அரிவாள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில் கொலை, கொள்ளை, திருட்டு என 16 வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல ரவுடியான எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டு நாயக்கன் பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மாரிசெல்வம் (26) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர பழைய வழக்குகளில் ஈடுபட்டுள்ளவர்கள் 84 பேர் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 107 மற்றும் 110 ஆகிய பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் அந்நிய நபர்கள் மற்றும் சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கியுள்ளனரா எனவும் சோதனையிடப்பட்டும், அனைத்து காவல் நிலைய  வாகன எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து ஆங்காங்கே தீவிர வாகன சோதனை மேற்கொண்டு கஞ்சா போன்ற போதைப்பொருள் உட்பட சட்டவிரோதமாக எதுவும் கடத்தப்படுகிறதா எனவும சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது, இதில்   மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.*

நேற்று முன் தினம் (23.09.2021) நடைபெற்ற தீவிர ரோந்தில் 47 ரவுடிகள் பிடிக்கப்பட்டு, 42 அரிவாள், வாள் போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர பழைய வழக்குகளில் ஈடுபட்டுள்ளவர்கள் 103 பேர் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 107, 109 மற்றும் 110 ஆகிய பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது, தூத்துக்குடி மாவட்டத்தில் 90 தங்கும் விடுதிகள் சோதனையிடப்பட்டுள்ளது. அதே போன்று தீவிர வாகன சோதனையில் 1550  வாகனங்கள் சோதனையிடப்பட்டு மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியதாக 1500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 5 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீவிர ரோந்து ப்பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும் எனவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital




Thoothukudi Business Directory