» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாப சாவு

வெள்ளி 24, செப்டம்பர் 2021 8:24:47 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சில்லாநத்தம் நடுத்தெருவை சேர்ந்தவர் கண்ணன் (54). இவரது மனைவி செந்தாமரை (47). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் உள்ள மாடியில் தூங்கிக் கொண்டு இருந்தனர்.  அப்போது கீழ்தளத்தில் உள்ள வீட்டின் கதவை யாரோ தட்டுவது போல் சத்தம் கேட்டு உள்ளது. 

உடனே செந்தாமரை எழுந்து மாடியில் இருந்து வெளியே பார்த்தார். அப்போது, எதிர்பாராவிதமாக அவர் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செந்தாமரை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital






Thoothukudi Business Directory