» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் திடீர் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி

வியாழன் 23, செப்டம்பர் 2021 8:37:24 PM (IST)

தூத்துக்குடியில் இன்று மாலையில் திடீரென பெய்த மழையால், வெப்பம் தனிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தூத்துக்குடியில் இன்று மதியம் முதல் மேக மூட்டமாக காணப்பட்டது. மாலையில் 4 மணியளவில் திடீரென இடி மின்னலுடன் கருமேகங்கள் திரண்டு பலத்த மழை பெய்தது. சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் திடீரென மழை பெய்தது. தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி, சாலைகள் சேறும் சகதியுமாக மாறியதால் போக்குவரத்து சற்று பாதிக்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory