» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு : அதிமுக மாவட்ட செயலாளர்கள் அறிக்கை
வியாழன் 23, செப்டம்பர் 2021 7:55:49 PM (IST)
திருநெல்வேலி, தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பிரச்சாரம் செய்ய வருகை தரும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி நடைபெறும் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரச்சாரம் செய்ய நாளை காலை மதுரை விமானநிலையம் வருகை தந்து அங்கிருந்து தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை கே.டி.சி நகர் மாதா மாளிகை ஆகிய இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு சென்னை செல்வதற்காக தூத்துக்குடி வாகைக்குளம் விமானநிலையம் வருகை தருகிறார்.
அதன் சமயம் தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் மதியம் 02.30 மணிக்கு மாண்புமிகு எடப்பாடியார் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட, ஒன்றிய, மாநகர பகுதி, நகர, பேரூராட்சி, ஊராட்சி, வட்ட, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள் மகளிர்கள் தொண்டர்கள் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் கூறியுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளது.