» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விளாத்திகுளத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி: கனிமொழி எம்பி ஆய்வு
வியாழன் 23, செப்டம்பர் 2021 7:40:44 PM (IST)
விளாத்திகுளத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமையும் தற்காலிக இடத்தை கனிமொழி எம்பி பார்வையிட்டார்.
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின்படி அறநிலையத்துறை சார்பாக விளாத்திகுளம் அதன் சுற்று வட்டார பகுதி மாணவ-மாணவிகளின் நீண்ட நாள் கோரிக்கையான விளாத்திகுளத்தில் அமைய இருக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைவதற்கான தற்காலிக இடத்தை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தலைமையில் கிழக்கு ஒன்றிய செயலாளர், சின்னமாரிமுத்து பேரூர் செயலாளர், இரா.வேலுச்சாமி பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜாக்கண்ணு, அன்புராஜன், முத்துலட்சுமி அய்யன்ராஜ், வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் ஜாகீர்உசேன், இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், பொறியாளர் பாண்டியராஜன், சென்றாயப் பெருமாள், விவசாய தொழிலாளர் அணி நீதிராஜன், ஒன்றிய கவுன்சிலர் செந்தூர்பாண்டியன் உட்பட பலர் உடன் சென்றனர்.