» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 30வது கட்ட விசாரணை நிறைவு : 100பேர் ஆஜர்
வியாழன் 23, செப்டம்பர் 2021 4:43:59 PM (IST)
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் ஆணையத்தின் 30வது கட்ட விசாரணை இன்று நிறைவு பெற்றது.
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிஅருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. ஒருநபர் விசாரணை ஆணையம் 29 கட்ட விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி விருந்தினர் மாளிகையில் விசாரணை அதிகாரி அருணாஜெகதீசன் தலைமையில் 30-வது கட்ட விசாரணை கடந்த 13ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற விசாரணைக்காக 122 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. 122 பேரில் 100 பேர் விசாரணை ஆணையம் முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில் 30 வது கட்ட விசாரணை இன்று முடிவடைந்துள்ளது. விசாரணை ஆணையத்தின் 31ம் கட்ட விசாரணை அக்டோபர் மாதம் 22ம் தேதி தொடங்க உள்ளது.
ஓSep 23, 2021 - 07:30:36 PM | Posted IP 162.1*****