» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண் தீக்குளித்து தற்கொலை: போலீஸ் விசாரணை

ஞாயிறு 1, ஆகஸ்ட் 2021 10:46:16 PM (IST)

எட்டயபுரம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம்,எட்டயபுரம் அருகே உள்ள அழகாபுரியை சேர்ந்த வேல்முருகன் மனைவி தங்கம்மாள் (42). இவருக்கு கடந்த ஒரு மாத காலமாக மனநிலை பாதிக்கப்பட்டு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று காலை வீட்டின் பின்புறம் வைத்து தங்கம்மாள் தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். 

இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்ததும் மாசார்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். தங்கம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory