» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டைப்ரேட்டிங் பயிற்சிக்கு சென்ற மாணவி மாயம்
ஞாயிறு 1, ஆகஸ்ட் 2021 10:42:13 AM (IST)
சாயர்புரம் அருகே டைப்ரேட்டிங் பயிற்சிக்கு சென்ற மாணவி கானாமல் போனது குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள கொம்புக்கார பொட்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆத்திமுத்து. இவரது மகள் சுகன்யா (17). இவர் கடந்த 30ம் தேதி சாயர்புரத்தில் உள்ள டைப்ரேட்டிங் பயிற்சிக்கு சென்று வருவதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை. சுகன்யாவை உறவினர்கள் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ஆத்திமுத்து சாயர்புரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மேரி ஜெஸிந்தா வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.